உள்ளூர் செய்திகள்

போலி வெள்ளி பொருட்களை விற்க முயன்ற 2 பேர் கைது

Published On 2022-12-06 09:35 GMT   |   Update On 2022-12-06 09:35 GMT
  • பிரகாஷ் (வயது 26). இவர் இரும்பாலை பகுதியில் வெள்ளி மற்றும் தங்க நகைகளை விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
  • போலி வெள்ளி பொருட்களை விற்க முற்பட்டவர் கைது

சேலம்:

சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி அடுத்த சித்தன் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 26). இவர் இரும்பாலை பகுதியில் வெள்ளி மற்றும் தங்க நகைகளை விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று காலை இவரது கடைக்கு வந்த 2 வாலிபர்கள் போலி வெள்ளி பொருட்களை விற்க முற்பட்டனர். இதை கண்டுபிடித்த பிரகாஷ் இது குறித்து உடனடியாக இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக 2 வாலிபர்களையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் காரிப்பட்டி அருகே உள்ள எஸ்.என். மங்கலம் பச்சியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த நவீன்ராஜ் ( 30), அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் ( 31) என்பது தெரிய வந்தது.

2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News