உள்ளூர் செய்திகள்

கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கண் பரிசோதனை முகாம்

Published On 2023-04-13 09:58 GMT   |   Update On 2023-04-13 09:58 GMT
  • நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
  • கண் பார்வை குறைவு உள்ளிட்டவைகள் குறித்து சோதனை செய்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் ரோட்டரி சங்கம் மற்றும் எல்.பி.எப். தொழிற்சங்கம் சார்பில் நகராட்சி துப்புரவு பணி, தூய்மை பணி ஊழியர்களுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார்.

செயலாளர் நவநீதகண்ணன், பொருளாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்.பி. எப். தொழிற்சங்க நகராட்சி பிரிவு தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

முகாமை நகர மன்ற தலைவர் செல்வராஜ் துவைக்கி வைத்தார்.

முகாமில் புதிய நவீன கருவிகள் கொண்டு நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

இதில் புரை கண், கண் மறைவு, கண் பார்வை குறைவு உள்ளிட்டவைகள் சோதனை செய்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறது. அந்த முகாமிலேயே மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

இதில் ஏரானவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் தேர்வு முருகேசன் சாசன தலைவர் ராமன் மற்றும் ஆர்.கே.சேகர், தனபால், குஷிமாதவன், தங்கதுரை ராஜ், இளங்கோ, உள்ளிட்ட உறுப்பினர்கள், திமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் பொறுப்பாளர்கள் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News