உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே தொழிலாளியிடம் பணம் பறிப்பு
- இசக்கிமுத்து நேற்று ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த வடக்கு மீனவன்குளத்தை சேர்ந்த பரமசிவன், இசக்கிமுத்துவிடம் செலவுக்கு ரூ. 200 தருமாறு கேட்டுள்ளார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் மேல காலனியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது55). தொழிலாளி. நேற்று இவர் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த வடக்கு மீனவன் குளத்தை சேர்ந்த பரமசிவன் (47), இசக்கிமுத்துவிடம் செலவுக்கு ரூ. 200 தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவன் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூ. 150-ஐ பறித்து சென்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பரமசிவனை தேடி வருகிறார்.