உள்ளூர் செய்திகள்

தலைஞாயிறு பேரூராட்சி பகுதி உணவகங்களில் செயல் அலுவலர் குகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஓட்டல்களில் செயல் அலுவலர் திடீர் ஆய்வு

Published On 2022-07-06 09:18 GMT   |   Update On 2022-07-06 09:18 GMT
  • ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும் எனவும் சூடான உணவுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
  • குடிநீர் குழாயில் உடைப்பு அல்லது கசிவு இருந்தால் உடன் பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

வேதாரண்யம்:

காரைக்கால் பகுதிகளில் காலரா நோய் தொற்று எற்பட்டுள்ளதை தொடர்ந்து தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள உணவகங்களில் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக செயல் அலுவலர் குகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும் எனவும் சூடான உணவுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் சமையலறை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். தூய்மையாக பராமரிக்க தவறினால் உரிமம் ரத்து செய்யப் படும் என தெரிவித்துள்ளார்.

காலரா முன்னெச்ச ரிக்கை குறித்து செயல் அலுவலர் குகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,

பொது மக்கள்திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது எனவும் , கழிவ றைக்கு சென்று வந்த பின்னர் கைகளை கழுவ வேண்டும் எனவும் குறைந்தபட்சம் தண்ணீரை 20 நிமிடம்காய்ச்சிய பிறகே குடிக்க வேண்டும் எனவும் காலரா அறிகுறிகள் காண ப்பாட்டில்அரிசி கஞ்சி நீர் மோர் இளநீர் நீராகாரம் என்ற பானங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம் இந்த காலரா அறிகுறிதென்பட்ட அருகில் உள்ள மூத்த குடிம க்களுக்கு உதவி செய்யுங்கள் எனவும் குடிநீர் குழாயில் உடைப்பு அல்லது கசிவு இருந்தால் உடன் பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் வயிற்று வலி, வயிற்று போக்கு மற்றும் வாந்தி அறிகுறி இருப்பின் உடன் அரசு மருத்துவமனயை அணுக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆய்வின்போது இளநிலை உதவியா ளர் குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் சென்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News