உள்ளூர் செய்திகள்

நிர்வாக குழு கூட்டம் நடந்த போது எடுத்தப்படம்.


சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நிர்வாக குழு கூட்டம்

Published On 2022-06-23 08:55 GMT   |   Update On 2022-06-23 08:55 GMT
  • கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது.
  • சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி தலைமை தாங்கினார்.

சாயர்புரம்:

சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாக குழு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி தலைமை தாங்கினார். இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக வங்கி எல்கைக்கு உட்பட்ட நட்டாத்தி பஞ்சாயத்து பட்டான்டிவிளை கிராமத்தில் வாரத்தில் ஒரு நாள் செயல்படும் பகுதி நேர நியாய விலை கடையை 2 நாட்கள் திறந்து வைப்பது, கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சங்க செயலாளர் சகுந்தலா தேவி வரவேற்றார். வங்கி பணியாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். காசாளர் கிருபாகரன் தவமணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News