உள்ளூர் செய்திகள்
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
சின்னமனூரில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
- கூட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கே.எம்.பட்டி தமிழ்செல்வன் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டது.
- முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்டது.
சின்னமனூர்:
சின்னமனூரில் தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீர மங்கைகள் நலச்சங்கம், தேனி வைகை ஜவான் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கே.எம்.பட்டி தமிழ்செல்வன் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டது.
முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதற்கு கலெக்டர் மற்றும் தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நல அலுவலக துணை இயக்குனருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் சங்க தலைவர் பவுன், செயலாளர் சிவபாண்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.