உள்ளூர் செய்திகள்

வட மாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-02-28 09:55 GMT   |   Update On 2023-02-28 09:55 GMT
  • வீட்டில் நாகேந்திரகுமார் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டு இருந்தார்.
  • இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்துள்ள செளரா பகுதியைச் சேர்ந்த வர் நாகேந்திர குமார்(21). இவரது மனைவி பூஜா. பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் புரா கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் உள்ளார்.

நாகேந்திர குமார் ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்த ன்று நாகேந்திர குமார் மனைவி பூஜாவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவரும் இடையே போனில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாகேந்திர குமார் உடன் வேலை பார்க்கும் கோவிந்தன் என்பவர் நாகேந்திரகுமார் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டி உள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் நாகேந்திர குமார் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டு இருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகேந்திரகுமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News