உள்ளூர் செய்திகள்

காரில் மது கடத்திய வாலிபர் கைது

Published On 2023-06-10 06:52 GMT   |   Update On 2023-06-10 06:52 GMT
  • காரில் இருந்தவர்கள் காரை வேகமாக திருப்ப முயன்றனர்.
  • 48 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.

பெருந்துறை,

பெருந்துறை சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

பெருந்துறை-கோவை சாலையில் பெருந்துறை போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று போலீசாரை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் காரை வேகமாக திருப்ப முயன்றனர். இதைப்பார்த்த போலீ சார் அந்த காரினை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

காரில் சீனாபுரம் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 48 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (40) என்பது தெரியவந்தது.

இதையடுத்து சுரேஷ்கு மாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 48 மதுபாட்டில்கள் மற்றும் காரினை பறிமுதல் செய்தனர். மேலும் சுரேஷ்கு மாரை நீதிம ன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் மலைய ம்பாளையம் வெள்ளோட்டம்பரப்பு பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டி ல்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதேபகுதியை சேர்ந்த சுந்தரம் (76) என்பவரை போலீசார் கைது செய்து 5 மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.

கோபி சுண்டக்காம்பாளையம் எல்.பி.பீ. வாய்க்கால் கரை பகுதியில் மது விற்றதாக நம்பியூர் ஏலத்தூரை சேர்ந்த ரமேஷ்குமார் (37) என்பவரை போலீசார் கைது செய்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News