உள்ளூர் செய்திகள்
கோபி அருகே கட்டிட வேலைக்கு சென்ற தொழிலாளி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி கரட்டடிபாளையம் தரணி நகரை சேர்ந்தவர் முருகன் (58).
கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் முருகன் குறித்த எவ்வித தகவலும் இல்லாததால் மகள் கவுரி கோபி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தொழிலாளியை தேடி வருகின்றனர்.