உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-08-04 14:27 IST   |   Update On 2023-08-04 14:27:00 IST
  • தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • இது குறித்து ஈரோடு வீரப்பன்ச த்திரம் போலீ சார் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு,

ஈரோடு அசோகபுரம் 4-வது வீதியைச் சேர்ந்தவர் முருந்தன் (வயது 46). தொழிலாளியான இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் உமாராணி என்பவ ருடன் திருமணமாகி 2 வருட ங்களில் உமாராணி இறந்து விட்டார்.இதையடுத்து கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் சிந்துபைரவி என்ற பெண்ணு டன் திரும ணமாகியது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 5 வருடங்களாக சிந்துபைரவி கணவரை விட்டுப் பிரிந்து சென்று குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். மனைவி மற்றும் குழந்தையை பிரிந்ததிலிருந்து முகுந்தன் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதையடுத்து முகுந்தன் வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்து வர்கள் வரும் வழியிலேயே முகுந்தன் இ றந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து ஈரோடு வீரப்பன்ச த்திரம் போலீ சார் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News