உள்ளூர் செய்திகள்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-11-19 07:43 GMT   |   Update On 2023-11-19 07:43 GMT
  • சிவக்குமார் விஷ மருந்தை சாப்பிட்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை பகுதியில் வசித்து வருபவர் வெங்கடாசலம் மகன் சிவக்குமார் (வயது 42). இவர் தறி ஓட்டும் வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி கலாமணி (36). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடைபெற்றது. இவ ர்களுக்கு குழந்தை இல்லை.

சிவகுமார் நீண்ட நாட்க ளாக கடும் வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததால் மரு த்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் வயிற்று வலி குணமாகாததாலும், தனக்கு குழந்தை இல்லாததாலும் மனவேதனையில் இருந்த சிவக்குமார் விஷ மருந்தை சாப்பிட்டார்.

இதையடுத்து உறவின ர்கள் அவரை மீட்டு பெரு ந்துறை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்நி லையில் அங்கு சிகிச்சை பெ ற்று வந்த சிவகுமார் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.

பின்னர் இது குறித்து அவரது மனைவி கலாமணி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News