உள்ளூர் செய்திகள்

குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் போராட்டம்

Published On 2022-07-04 14:43 IST   |   Update On 2022-07-04 14:43:00 IST
  • குட்டை மேடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீெரன இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தகவல் அறிந்ததும் பவானி துணை தாசில்தார் சரவணன் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி குட்டைமேடு பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தினந்தோறும் காலை 6 மணிக்கு குடிநீர் வினி யோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த பகுதிக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஏற்கனவே ஒலகடம் பேரூராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அந்த பகுதி மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக குட்டைமேடு பகுதிக்கு போதுமான ஆற்று குடிநீர் வரவில்லை என பவானி -வெள்ளித்திருப்பூர் மெயின் ரோட்டில் ஒலகடம் அருகே குட்டை மேடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீெரன இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி துணை தாசில்தார் சரவணன் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

Tags:    

Similar News