உள்ளூர் செய்திகள்

தீ விபத்தில் பெண் உடல் கருகி சாவு

Published On 2023-03-11 09:33 GMT   |   Update On 2023-03-11 09:33 GMT
  • மண்எண்ணை விளக்கு ரத்னா ஆடை மீது பட்டதில் தீ பற்றி எரிய தொடங்கியது.
  • இதனால் உடல் கருகி வேதனையால் அலறினார்.

கோபி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உக்கரம், மில்மேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ரத்னா (40).

சம்பவத்தன்று இரவு ரத்னா மண்எண்ணை விளக்கை பற்ற வைத்து விட்டு அருகில் பாய் போட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் பட்டு அருகில் இருந்த மண்எண்ணை விளக்கு ரத்னா ஆடை மீது பட்டதில் தீ பற்றி எரிய தொடங்கியது.

இதனால் ரத்னா உடல் கருகி வேதனையால் அலறினார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை யில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்னா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரத்னா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News