உள்ளூர் செய்திகள்

கம்பி வேலியை சேதப்படுத்திய காட்டு யானைகள்

Published On 2023-06-20 15:00 IST   |   Update On 2023-06-20 15:00:00 IST
  • யானைகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை இடித்து தள்ளி சேதப்படுத்தியது.
  • இதனால் அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே வனப்பகுதியை ஒட்டி உள்ள அண்ணா நகர், இரட்டை சாலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை வீட்டு இரண்டு காட்டு யானைகள் வெளியேறி பவானிசாகர் சாலைக்கு வந்தது. பின்னர் குப்பை கிடங்கு பகுதிக்கு வந்த யானைகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை இடித்து தள்ளி சேதப்படுத்தியது.

இதை கண்டதும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் யானைகளை பட்டாசு வெடித்து வன பகுதிக்குள் விரட்டினர். இதனால் அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,

வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட அகழிகள் ஆழமாக இல்லாமல் மண் மூடி கிடக்கிறது. இதன் காரணமாக யானைகள் ஊருக்குள் சுலபமாக புகுந்து விடுகின்றன.

பயிர்களையும் சேதம் செய்து வருகிறது. எனவே மீண்டும் அகழி வெட்ட வேண்டும். மேலும் அடர்ந்த வனப் பகுதிக்குள் யானைகளை விரட்ட வனத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News