உள்ளூர் செய்திகள்

புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-12-01 07:00 GMT   |   Update On 2023-12-01 07:00 GMT
  • புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை சார்பாக அளவீடு செய்யும் பணி நடந்தது.
  • பொதுமக்கள் திரண்டு வந்து சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னிமலை:

சென்னிமலை நகர பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெருசலை கட்டுப்படுத்த சென்னி மலை-நகர பகுதிக்கு கனரக வாகனங்கள் வராமல் காங்கேயம், பெருந்துறை செல்லும் படி புறவழி ச்சாலை அமைக்க நெடுஞ்சா லை துறை சார்பாக அளவீடு செய்யும் பணி நடந்தது.

இதில் பசுவபட்டி ஊராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் புறவழிசாலை வந்து பசுவபட்டி பிரிவு அருகே காங்கேயம் மெயின் ரோட்டில் இணைக்கும் படி அளவீடு செய்துள்ளனர்.

அந்த பகுதியில் புறவழி சாலை வேண்டாம். பசுவபட்டி பிரிவு, வெப்பிலி பிரிவு அருகே தற்போது அதிக அளவில் விபத்துகள் நடக்கிறது.

மேலும் புறவழி சாலை வந்தால் நாங்கள் அதிகம் பாதிக்கப்படுவோம் என கூறி திருவள்ளுவர் நகர், காமராஜ் பதி குடியிருப்பு பகுதி, தட்டாங்காடு குடியிருப்பு, பசுவபட்டி பிரிவு பகுதி பொது மக்கள் திரண்டு வந்து, சென்னி மலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் புறவழிச்சாலை போடப்பட உள்ளது. இதற்காக பசுவப்பட்டி, திருவள்ளுவர் நகர் வழியாக நில அளவை பணிகள் நடைபெறுகிறது.

இந்த வழியாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் திருவள்ளுவர் நகர், கே.சி.நகர், காமராஜர் நகர், தட்டங்காடு ஆகிய 4 கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு மிக ப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்காமால் மாற்று வழியில் அமைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News