உள்ளூர் செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய வரட்டுப்பள்ளம் அணை

Published On 2022-06-07 07:01 GMT   |   Update On 2022-06-07 07:01 GMT
  • தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டிய வரட்டுப்பள்ளம் அணை எட்டி உள்ளது.
  • உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

அந்தியூர்:

அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை பர்கூர் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவான 33.5 அடியாகும்.

கடந்த வாரம் பர்கூர் மலை மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வந்தது.

இதையடுத்து அணை யின் நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லா ததால் முழு கொள்ளளவான 33.5 அடியாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த நேற்று மற்றும் நேற்று முன்தினம் என தொடர்ந்து 2 நாட்கள் அந்தியூர் மற்றும் பர்கூர் மலை சுற்றுப் பகுதி மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது.

இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் அணையின் முழு கொள்ள ளவான 33.5 அடியை எட்டி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 43 கன அடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த மழைப் பொழிவால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News