கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி
- கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது
- வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படும் திட்டங்கள் பற்றி விளக்கப்பட்டது
ஈரோடு:
வேளாண்மை - உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தபடும் அஞ்சூர் கிராமத்தில் நீடித்த நிலை யான கரும்பு சாகுபடி தொழி ல்நுட்பங்கள்குறித்த பயிற்சி நடைப்பெற்றது. இந்த பயிற்சிக்கு கொடுமுடி வட்டார வேளா ண்மை உதவி இயக்குநர் பொ.யசோதா தலைமை தாங்கினார். இப்பயிற்சியில் சுரேஸ் (ஈ.ஐ.டி.பாரி) நாற்றாங்கால் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும், சர்க்கரை ஆலை இடுபொருட்கள் தயாரிப்பது குறித்து விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.
வேளாண் அறிவியல் நிலையம் பூச்சியல் துறை டாக்டர் கணேசன் கரும்பு பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய் பற்றிய ஒருங்கிணைந்த மேலா ண்மை குறித்து விளக்கினார். மேலும் துணை வேளா ண்மை அலுவலர் ராஜா மணி கலந்து கொண்டு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல் படும் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ் உழவன் செயலி, வாடகை, அக்ரி கார்ட், மானிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் வேளாண்மை அலு வலர் ரேகா உயிர் உரங்கள் பயன்பாடுகளை விளக்கி னார். மேலும் உதவி வேளா ண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.