உள்ளூர் செய்திகள்

துவரை நடவுமுறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

Published On 2023-09-21 14:57 IST   |   Update On 2023-09-21 14:57:00 IST
  • துவரை நடவுமுறை தொடர்பான பயிற்சி மைலம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
  • தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

ஈரோடு:

பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் துவரை நடவுமுறை தொடர்பான பயிற்சி மைலம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.

பவானி வேளாண்மை உதவி இயக்குநர் கனிமொழி வேளாண்மை திட்டங்கள் மற்றும் துவரை நடவுமுறை பயிரிட்டு அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினார்.

கோபி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் உதவி பேராசிரியர் சீனிவாசன் துவரை பயிரில் விதை நேர்த்தி முறைகள் மற்றும் நாற்றங்கால் அமைப்பது மற்றும் 30-35 நாட்களில் நுனிக்கிள்ளுதல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

அங்கக விதை சான்று துறை மற்றும் விதை சான்று அலுவலர் தமிழரசு துவரை பயிரில் விதை தேர்வு முறை, விதைப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், மதிப்புக்கூட்டுத்தல் குறித்து ஆலோசணை கூறினார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் கங்கா உழவன் செயலி பதிவேற்றம், இ-நாம் மற்றும் இ-வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார்.

முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News