கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
- விடுமுறை நாள் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.
கோபி,
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் வந்து அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கி றார்கள்.
இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணைக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமைகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை முதலே பொதுமக்கள் பலர் வந்து சென்றனர். இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழ மை) விடுமுறை நாள் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.
ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அதிகளவில் வந்திருந்தனர். மேலும் இளைஞர்கள் உள்பட பலர் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி அணைக்கு வந்தனர்.
இதை தொடர்ந்து பொது மக்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.