உள்ளூர் செய்திகள்

கொடிவேரி-பவானிசாகரில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-10-22 12:22 IST   |   Update On 2023-10-22 12:22:00 IST
  • ஈரோடு மாவட்ட த்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.
  • வ.உ.சி. பூங்காவிலும் இன்று மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே கொ டிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.

இந்த கொட்டும் தண்ணீ ரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்ப ணைக்கு வந்து செல்கி றார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்க ளில் ஆயிர க்கணக்கான பொதுமக்கள் குடும்பத்து டன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து செல்கி றார்கள்.

இந்த நிலையில் சனிக்கிழ மை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆயுத பூஜை, விஜய தசமி என தொடர்ந்து விடு முறை நாட்கள் வருகிறது. இதனால் ஈரோடு மாவட்ட த்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்களின் கூட்டம் நேற்றும் இன்றும் அதிகளவில் இருந்தது.

தொடர் விடுமுறை என்பதால் கொடிவேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று (சனிக்கிழ மை) மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்களில் இருந்தும் பொது மக்கள் பலர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

இதே போல் இன்று ஞாயி ற்றுக்கிழமை கொடி வேரிக்கு வழக்கத்ைத விட பொதுமக்கள் அதிகள வில் வந்தனர். மேலும் இன்று வெளி மாவட்டங்களில் இருந்து கார், வேன் மற்றும் சுற்றுலா வாகன ங்களில் இருந்து கொடிவேரிக்கு ஏராள மானோர் வந்திருந்தனர். காலை முதலே கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அலை மோதியது.

ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரு ந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏரா ளமான பொதுமக்கள் கொடி வேரிக்கு தங்கள் குடும்ப த்துடன் வந்திருந்த னர்.

இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என பலர் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் பலர் வந்து குளித்து குதுகளித்த னர். இதையடுத்து பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகள், வெளிப்பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து விட்டு சென்றனர்.

இதே போல் சத்தியமங்க லம் அருகே உள்ள பவானி சாகருக்கு இன்று பொது மக்கள் பலர் வந்திருந்தனர். இைத தொடர்ந்து குடும்ப த்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளை யாடி மகிழ்ந்தனர்.

மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி குது களித்தனர். பெண்கள் பலர் சறுக்கு விளையாடி இயற்கையை ரசித்து சென்ற னர். இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தனர்.

இதனால் பவானிசாகர் பகுதியில் இன்று எங்கு பார்த்தாலும் பொது மக்க ளின் கூட்டமாகவே காண ப்பட்டது. மேலும் இன்று அணை பூங்காவின் வெளி பகுதியில் மீன் மற்றும் பல்வே று கடைகள் அமைக்க ப்பட்டு இருந்தன. அங்கும் மக்களின் கூட்டம் அலை மோதியது.

மேலும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரி யூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பண்ணாரியம்மன் கோவில் என கோபி, சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதி களில் உள்ள சுற்றுலா தலங்களில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாக காணப்பட்டது.

ஈரோடு வ.உ.சி. பூங்காவிலும் இன்று மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் அங்கு ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி குதுகளித்தனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளையும் உண்டு மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News