உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.

அரசு அதிகாரிகளை தர குறைவாக பேசிய டிப்பர் லாரி டிரைவர் கைது

Published On 2023-03-26 08:15 GMT   |   Update On 2023-03-26 08:15 GMT
  • டிரைவர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
  • கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பட்டி மணிகாரம்பாளை யத்தில் தனியார் கல்குவாரி இயங்கி வந்துள்ளது. இதற்கான உரிமையை புதுப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கல் குவாரியில் இருந்து டிப்பர் லாரி மூலம் நம்பியூர் வேமாண்டம் பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மண் மற்றும் ரப்கல் ஏற்றி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை மற்றும் புவியாளர் அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் மாவட்ட அதிகாரிகள் லட்சுமி, சிலம்பரசன் ஆகியோர் ஈடுபட்டனர்.

அப்போது பனங்காட்டு பாளையம் அருகில் ரப் கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை செய்தனர். இதை தொடர்ந்து வாகன டிரைவரிடம் ஆவணங்களை கேட்ட பொழுது டிரைவர் அதிகாரி களை தரக்குறை வாக பேசியதாக கூறப்படு கிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை மற்றும் புவியாளர் அதிகா ரிகள் கொடுத்த புகாரின் அடி ப்படை யில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் நிர்மலா விசார ணை மேற்கொ ண்டா ர்.

அப்போ து கல் குவா ரிக்கு முறை யான ஆவணம் இல்லை என வும், டிரை வர் சரியா ன பதில் அளிக்க வில்லை.

அதைத்தொ ட ர்ந்து போலீ சார் டிப்பர் லாரியை ஓட்டி வந்த நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரை சேர்ந்த கதிர்வேல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து அவரை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News