உள்ளூர் செய்திகள்

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது

Published On 2023-11-07 14:44 IST   |   Update On 2023-11-07 14:44:00 IST
  • குண்டேரிப்பள்ளம் அணைக்கு இரவு பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது.
  • அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 26.26 அடியாக காணப்படுகிறது.

டி.என்.பாளையம், நவ.7-

ஈரோடு மாவட்டம் கோபி, சத்தி மற்றும் குண்டேரி பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இதனால் டி.என்.பாளை யம் அடுத்த கொங்கர்பாளை யம் ஊராட்சி குண்டேரிப்பள்ளம் அணைக்கு இரவு பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது.

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரவு 86.2 மி.மீ அளவு மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

குன்றி, மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை க்கு நீர்வரத்து அதிகரித்து ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து உள்ளது.

குண்டேரிப்பள்ளம் அணையின் முழுக்கொள்ள ளவு 41.75 அடி ஆகும். நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 24.32 அடி இருந்தது.

இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இரவு பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து 66.44 கன அடி நீர் வந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 26.26 அடியாக காணப்படுகிறது.

மேலும் டி.என்.பாளை யம் சுற்றுவட்டார பகுதி களான டி.ஜி.புதூர், ஏளூர், அரக்கன் கோட்டை, வாணி ப்புத்தூர், கொங்கர்பாளையம், டி.என்.பாளையம், பங்களாப்புதூர், நஞ்சை புளியம்பட்டி, புஞ்சை துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டி, பெருமுகை, அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 2 மணி நேரம் நேரம் கன மழையும், அதனை தொடர்ந்து மிதமான மழை யும் பெய்தது.

கணக்கம்பாளையம் பகுதியில் 95.4 மி.மீ, குண்டேரிப்பள்ளம் 86.2 மி.மீ, கொடிவேரி 44 மி.மீ மழை பொழிவும் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News