உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 84 அடியை நெருங்கியது

Published On 2023-07-30 09:30 GMT   |   Update On 2023-07-30 09:30 GMT
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.73 அடியாக உயர்ந்துள்ளது.
  • இன்று காலை அணைக்கு 2,953 கன அடி நீர்வரத்து வருகிறது.

ஈரோடு:

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதா ரமாகவும் உள்ளது பவானி சாகர் அணை. அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலை ப்பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. பின்னர் மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.73 அடியாக உயர்ந்துள்ளது.

இன்று காலை அணைக்கு 2,953 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடியும்,

குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News