உள்ளூர் செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது

Published On 2023-04-20 09:26 GMT   |   Update On 2023-04-20 09:26 GMT
  • 2-வது நாளாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • 6 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடி க்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

இந்நிலையில் கடந்த 3 வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுகாதாரத்து றையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

இதைதொடர்ந்து நேற்றும் சுகாதாரத் துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 764 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 998 பேர் கொரோனா பாதி ப்பிலி ருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரண மாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 32 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டத்தில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News