உள்ளூர் செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 38 ஆக குறைந்தது

Published On 2023-05-06 09:46 GMT   |   Update On 2023-05-06 09:46 GMT
  • மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • இதுவரை 736 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 877 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 8 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 736 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News