உள்ளூர் செய்திகள்

புதிய அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2022-09-28 14:50 IST   |   Update On 2022-09-28 14:50:00 IST
  • அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுக்க ப்பட்டது.
  • அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு உடனடி யாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அந்தியூர்:

அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என திருப்பூர் எம்.பி. சுப்பராய னிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்க ப்பட்டது.

இதையடுத்து எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டும் பணிகள் நடந்தது. அந்த பணிகள் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த கட்டிட திறப்பு விழா நடந்தது.

ஆனால் அந்த கட்டிடம் இன்னும் பயன் பாட்டுக்கு விடப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் அவசர சிகிச்சை மற்றும் பல்வேறு மருத்துவ தேவைகளுக்கு பெருந்துறை மற்றும் ஈரோடு உள்பட அருகே உள்ள அரசு மருத்துவ மனைக்கு பொது மக்கள் அனுப்பி வைக்க ப்பட்டு வருகிறார்கள்.

இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாக புகார் கூறினர். எனவே அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு உடனடி யாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News