உள்ளூர் செய்திகள்

எந்திரத்தில் குச்சியை விட்டு விளையாடிய சிறுமி சாவு

Published On 2023-02-23 09:36 GMT   |   Update On 2023-02-23 09:36 GMT
  • சபுஜா குமாரி குச்சியை எந்திரத்தின் சக்கரத்தில் உள்ள பெல்டில் குத்தியதாக தெரிகிறது.
  • இதில் குச்சி உடைந்து தாடையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு:

பீகார் மாநிலம், ஹிசுவா பகுதியை சேர்ந்தவர் அனூப் மாஞ்சி (43). இவர் ஈரோடு மாவட்டம் குப்பக்காடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அனூப்மாஞ்சி சம்பவத்தன்று பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அவரது மகள் சபுஜா குமாரி (12) விளையாடி கொண்டிருந்துள்ளார்.

அப்போது சபுஜா குமாரி கையில் வைத்திருந்த மரக் குச்சியை அங்கு இயங்கி கொண்டிருந்த எந்திரத்தின் சக்கரத்தில் உள்ள பெல்டில் குத்தியதாக தெரிகிறது.

இதில் குச்சி உடைந்து சபுஜா குமாரியின் தாடையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மயங்கி விழுந்த சிறுமியை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சபுஜா குமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News