உள்ளூர் செய்திகள்

தெரு நாய்களை பிடித்து வேனில் கடத்த முயன்ற கும்பலால் பரபரப்பு

Published On 2023-10-04 15:33 IST   |   Update On 2023-10-04 15:33:00 IST
  • தெரு நாய்களை சில கும்பல் அடைத்து கடத்த முயன்றுள்ளனர்.
  • அப்பகுதி மக்கள் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

ஈரோடு:

ஈரோடு அருகே 46 புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பச்சப்பாளி பகுதியில் ஒரு வேனில் அரசு அனுமதி இல்லாமல் தெரு நாய்களை சில கும்பல் அடைத்து கடத்த முயன்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அப்போது வேனில் 3 பேர் கொண்ட கும்பல் இருந்தனர். இது குறித்து தேசிய விலங்குகள் நல ஆணைய பொருளாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாய் கடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. அந்த பகுதிக்கு சென்ற தேசிய விலங்குகள் நல ஆணைய பொருப்பாளர் விசாரனை நடத்தியதில் யாரோ தனிநபர் தொடர்ந்து அந்த பகுதியில் நாய்களுக்கு விஷம் வைத்து கொல்வதும், பிடித்து சென்று கொல்வதும் வாடிக்கையாகி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

அரசின் அனுமதி இல்லாமலோ, மாவட்ட விலங்குகள் நல அதிகாரி உத்தரவு இல்லாமலோ, தேசிய விலங்குகள் நல ஆணையத்தின் மூலமாக அங்கீகரிக்கப்படாத அமைப்புகள் மூலமாக தெருநாய்களை பிடிப்பது குற்றமாகும்.

மீறி பிடிப்பவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தேசிய விலங்குகள் நல ஆணைய பொருளாளர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News