உள்ளூர் செய்திகள்

சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி

Published On 2022-09-03 07:47 GMT   |   Update On 2022-09-03 07:47 GMT
  • சென்னி மலை கைலாசநாதர் கோவிலில் பிட்டு திருவிழா கடந்த 42 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
  • இதைதொடர்ந்து ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடி வழிபாடு நடக்கும்.

சென்னிமலை:

மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில் வந்தி அம்மையார் என்ற மூதாட்டி, பிட்டு அமுது சமைத்து அதை விற்று பிழைத்து வந்தார். வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் துன்பம் அடைந்து பாண்டிய அரசனிடம் முறையிட்டனர்.

அப்போது அரசன் உடனடியாக மந்திரியை அழைத்து வீட்டுக்கு ஒருவர் வைகை கரைக்கு சென்று கரையை அடைக்க வேண்டும் என உத்தர விட்டார். வந்தி மூதாட்டி தன்னுடைய முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் கூலிக்கு ஆள் தேடியும் கிடைக்க வில்லை.

இதையடுத்து அவர் சிவபெருமானை வணங்கி கொண்டிருந்தார். அப்போது சுந்தரேச பெருமான் கூலி ஆளாக வந்தி மூதாட்டி முன்பு நின்றார். தான் பிட்டு உணவையே கூலியாக பெற்று கொள்வதாக கூறி வேலைக்கு சென்று வைகை கரையை அடைத்தார்.

இதை தொடர்ந்து வந்தி மூதாட்டிக்கும் பாண்டிய மன்னனுக்கும் சிவ பெரு மான் தரிசனமாக காட்சி அளித்தார். அந்த நாளே ஆவணி மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுகிறது.

இதையொட்டி சென்னி மலை கைலாசநாதர் கோவிலில் பிட்டு திருவிழா கடந்த 42 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி இந்த ஆண்டுக்கான பிட்டு திருவிழா வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

அன்று காலை 10 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெறுகிறது. சென்னிமலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்க ப்பட்டு மாலை 3.20 மணிக்கு வைகை கரைக்கு கைலாச நாதர், அலமேலுமங்கை மற்றும் வள்ளி தெய்வானை யுடன் சுப்பிரமணியசுவாமி தேரில் அருள் பாலிக்கிறார்.

இதைதொடர்ந்து ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடி வழிபாடு நடக்கும்.

இதற்கான ஏற்பாடுகளை பிட்டு திருவிழா குழு தலைவர் ஜெயலட்சுமி பரமானந்தன் தலைமையில் செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News