உள்ளூர் செய்திகள்

கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது

Published On 2022-07-28 10:03 GMT   |   Update On 2022-07-28 10:03 GMT
  • பெருந்துறை போலீசாருக்கு பீடா கடையில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
  • மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெருந்துறை:

ஒடிசா மாநிலம் பத்ரா மாவட்டம் திகிடி தாலுகா வருணை பகுதியை சேர்ந்தவர் அபய்குமார் பகரா (வயது 30). இவர் தற்பொழுது பெருந்துறையை அடுத்துள்ள மலைச்சீனாபுரம் பகுதியில் குடியிருந்து பீடா கடை வைத்து நடத்தி வருகிறார்.

பெருந்துறை போலீசாருக்கு இவரது கடையில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் அந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

இதில் கடையில் 80 கிராம் கஞ்சா மற்றும் 10 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 11 ஆயிரம் இருக்கும் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அபய்குமார் பகராவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News