உள்ளூர் செய்திகள்

பெருந்துறை பகுதியில் 150 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைப்பு

Published On 2023-10-28 09:21 GMT   |   Update On 2023-10-28 09:21 GMT
  • 150 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
  • இவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

பெருந்துறை:

பெருந்துறை நகர் மற்றும் சுற்று பகுதிகளில் குற்ற செயல்களை கண்காணித்து தடுக்கும் பொருட்டும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும்,

பெருந்துறை போலீசாரின் வேண்டுகோளை ஏற்று, பெருந்துறை அமைதி பூங்கா (நவீன எரிமேடை) அறக்க ட்டளையின் சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில்

பெரு ந்துறை நகர், முக்கியமான சாலைகள், தேசிய நெடு ஞ்சாலை மற்றும் பவானி ரோடு, ஈரோடு ரோடு, ஆர்.எஸ்.ரோடு, சென்னிமலை ரோடு, கோவை ரோடு, குன்னத்தூர் ரோடுகளில் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கும் உள்பட 150 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

இவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பயன்பாட்டிற்கு வரும்போது குற்ற செயல்களை கண்காணித்து, தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும் பெருந்துறை போலீசாருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Tags:    

Similar News