உள்ளூர் செய்திகள்

ஆவின் பாலகங்களில் இனிப்புகள் விற்பனை

Published On 2023-11-08 12:59 IST   |   Update On 2023-11-08 12:59:00 IST
  • இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
  • இதற்கு ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட கூட்டு றவு பால் உற்பத்தியா ளர்கள் ஒன்றியத்தில் விற்பனை பிரிவின் மூலம் நாளொ ன்றுக்கு சராசரியாக 70 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் பால் உப பொருட்கள் சுமார் ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு ஒன்றியத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமான இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

நெய் மைசூர்பா ½ கிலோ பாக்கெட் ஒன்று ரூ.270, பால்கோவா ½ கிலோ பாக்கெட் ஒன்று ரூ.250, ஸ்பெஷல் மிக்சர் ¼ கிலோ பாக்கெட் ஒன்று ரூ.100 என்ற விலைக்கு இனிப்புகள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் தீபாவளிக்கு ஆவின் இனிப்புகளை வாங்கி மகிழலாம். இதற்கு ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News