உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்

Published On 2023-08-11 09:29 GMT   |   Update On 2023-08-11 09:29 GMT
  • அணைக்கு வினாடிக்கு 669 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
  • வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.44 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 669 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி,

கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 1055 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 26.29 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 19.16 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது.

Tags:    

Similar News