உள்ளூர் செய்திகள்

ஈரோட்டுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2023-10-10 15:05 IST   |   Update On 2023-10-10 15:05:00 IST
  • மகாராஷ்டிரா மாநிலம் நான் தெட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் ஈரோட்டை அடைகிறது.
  • ஈரோடு பயணிகள் ரெயில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

ஈரோடு:

சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரா மாநிலம் நான் தெட்டில் இருந்து வரும் 13-ந் தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் 14-ந் தேதி மதியம் 12 மணிக்கு ஈரோட்டை அடைகிறது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் வரும் நவம்பர் மாதம் 26-ந் தேதி வரை இந்த சிறப்பு ெரயில் இயக்கப்படும்.

இதேப்போல் ஈரோட்டில் வரும் 15-ந் தேதி காலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ெரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு நான் தொட்டை சென்றடையும்.

ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும் நவம்பர் 26-ந் தேதி வரை இந்த சிறப்பு ரெயில் இயக்க ப்படும்.

ஜோலார்பேட்டை ெரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று தொடங்கி நாளை மறுநாள், 13 வரும் 21-ந் தேதி மற்றும் 23-ந் தேதி ஆகிய நாட்களில் ஈரோடு பயணிகள் ெரயில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

மறு மார்க்கத்தில் இன்றும், நாளை மறுநாளும், 13, 21, 28 ஆகிய தேதிகளில் ஜோலா ர்பேட்டை-திருப்பத்தூர் இடையே ரத்து செய்யப்பட்டு திருப்பத்தூரில் இருந்து ஈரோடுக்கு இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News