உள்ளூர் செய்திகள்

ரூ.10 லட்சத்து 39 ஆயிரத்துக்கு எள், தேங்காய்பருப்பு ஏலம்

Published On 2023-11-04 07:57 GMT   |   Update On 2023-11-04 07:57 GMT
  • சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
  • மொத்தம் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.

சிவகிரி:

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொண்ட 2 ஆயிரத்து 923 கிலோ எடையுள்ள எள் விற்பனையானது.

விற்பனையான எள்ளில் சிவப்பு ரக எள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.130.59 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.169.39 காசுகள், சராசரி விலையாக ரூ.161.99 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.

இதேபோல அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 166 மூட்டைகள் கொண்ட 7 ஆயிரத்து 591 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.85.69 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.86.88 காசுகள், சராசரி விலையாக ரூ.86.5 காசுகள் என்ற விலைகளிலும்,

2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலை யாக ரூ.63.69 காசுகள், அதிக பட்ச விலையாக ரூ.82.89 காசுகள், சராசரி விலையாக ரூ.72.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 792-க்கு விற்பனையானது.

மொத்தம் சிவகிரி மற்றும் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் எள் மற்றும் தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.10 லட்சத்து 39 ஆயிரத்து 591-க்கு விற்பனையானது.

Tags:    

Similar News