உள்ளூர் செய்திகள்

பவானி ஆற்றுக்கு நீர் திறப்பு குறைப்பு

Published On 2023-08-17 09:21 GMT   |   Update On 2023-08-17 09:21 GMT
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.18 அடியாக உள்ளது.
  • அணையில் இருந்து 955 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 228 கனஅடியாக குறைந்து ள்ளது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 955 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதே சமயம் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.08 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 17.88 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 21.72 அடியாகவும் உள்ளது.

Tags:    

Similar News