உள்ளூர் செய்திகள்

தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2023-05-29 06:33 GMT   |   Update On 2023-05-29 06:33 GMT
  • பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 82.06 அடியாக உள்ளது.
  • தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, 

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அதே நேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 82.06 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 393 கன அடியாக நீர் வரத்து குறைந்து விட்டது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக இதுவரை 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேப்போல் மழை ப்பொழிவு இல்லாத தால் மற்ற அணைகளின் நீர்மட்ட மும் குறைந்து வரு கிறது. இன்று காலை நிலவர ப்படி குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் 37.36 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.83 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 25 அடியாக உள்ளது.

Tags:    

Similar News