உள்ளூர் செய்திகள்

ரூ.75 ஆயிரம் பணத்தை இழந்த தனியார் பஸ் டிரைவர்

Published On 2022-11-21 15:35 IST   |   Update On 2022-11-21 15:35:00 IST
  • டிரைவர் லிங்கை ஓப்பன் செய்து அதில் தனது வங்கி விபரங்களை பதிவிட்டு உள்ளார்.
  • போலீசாரின் விசாரணையில் வடமாநில கும்பல் இவரது செல்போனுக்கு லிங்க் அனுப்பி பணம் மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது.

ஈரோடு:

ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டது.

சிறிது நேரத்தில் இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர் உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி உள்ளோம். அதில் உங்கள் விபரங்களை பதிவிடுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இது குறித்து எதுவும் விசாரிக்காமல் டிரைவர் லிங்கை ஓப்பன் செய்து அதில் தனது வங்கி விபரங்களை பதிவிட்டு உள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரம் பணம் எடுக்கப்பட்ட தற்கான மெசேஜ் வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் இது குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில் வடமாநில கும்பல் இவரது செல்போனுக்கு லிங்க் அனுப்பி பணம் மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து பஸ் டிரைவர் இழந்த ரூ.75 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் வங்கி மூலம் மீட்டுக் கொடுத்தனர். மேலும் புதிதாக வரும் லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News