உள்ளூர் செய்திகள்

சென்னம்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-07-25 09:28 GMT   |   Update On 2023-07-25 09:28 GMT
  • சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
  • இந்த தகவலை பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாப்பேட்டை:

பவானி கோட்டம் சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (26-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

சென்னம்பட்டி, கண்ணாமூச்சி, கொமராயனூர், கிட்டம்பட்டி, முரளிபுதூர், தொட்டிக்கிணறு, வெள்ளக்கரட்டூர், சனிசந்தை, விராலிக்காடு, குருவரெட்டியூர்,

ஆலாமரத்து தோட்டம், பொரவிபாளையம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், ஜி.ஜி.நகர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

இந்த தகவலை பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News