உள்ளூர் செய்திகள்

சளி, காய்ச்சல் பாதிப்புடன் பொதுமக்கள் ஆஸ்பத்திரி நோக்கி படையெடுப்பு

Published On 2022-07-14 09:35 GMT   |   Update On 2022-07-14 09:35 GMT
  • தட்ப வெப்ப மாற்றத்தால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • மருத்துவரிடம் முறையாக தகவல் சொல்லி சிகிச்சை பெற வேண்டும். சுயமாக சிகிச்சை பெற கூடாது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 40-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பாதிப்பினால் 280-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தட்ப வெப்ப மாற்றத்தால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

இதனால் ஈரோட்டில் தினமும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:

தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக தற்போது மாவட்டத்தில் சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ளது.

இதற்காக பெற்றோர்கள், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இதற்கு முறையான சிகிச்சை எடுத்து கொண்டாலே போதும். மருத்துவரிடம் முறையாக தகவல் சொல்லி சிகிச்சை பெற வேண்டும். சுயமாக சிகிச்சை பெற கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News