உள்ளூர் செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2022-11-29 15:02 IST   |   Update On 2022-11-29 15:02:00 IST
  • டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விடிய, விடிய பெய்த தொடர் கனமழை காரணமாக கொன்னக் கொடிகால் குடியிருப்பு பகுதியில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.
  • தண்ணீர் வடியாததால் வீட்டிற்குள் மழைநீர் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி, கவுண்டம் பாளைம் கிராமம், கொன்னக்கொடி கால் என்ற பகுதியில் சுமார் 70 குடும்பங்களில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விடிய, விடிய பெய்த தொடர் கனமழை காரணமாக கொன்னக் கொடிகால் குடியிருப்பு பகுதியில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இன்று வீட்டை விட்டு வெளியே மேடான சாலையோர பகுதிக்கு வந்தனர்.

தண்ணீர் வடியாததால் வீட்டிற்குள் மழைநீர் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

மழைநீர் வெள்ளத்தால் சில ஆடுகள் இறந்து விட்டதாகவும், வீடுகளுக்குள் பாம்பு போன்ற விஷ சந்துக்கள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும், வீடுகளுக்குள் புகுந்து மழைநீர் வெள்ளத்தை வெளியேற்ற சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News