உள்ளூர் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் ரசிகர்மன்றம் திறப்பு

Published On 2022-07-18 09:17 GMT   |   Update On 2022-07-18 09:17 GMT
  • ரசிகர் மன்ற பெயர் பலகை திறப்பு விழா மாவட்ட தலைவர் சன் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
  • சிறப்பு அழைப்பாளர்களாக அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ் துணைத் தலைவர் சாக்கு பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூர் மற்றும் ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக அந்தியூர் தவிட்டுப்பாளையம் அம்பேத்கர் வீதி, வேலாயுதம் வீதி, அண்ணா சாலை, சிங்கார வீதி, தேர் வீதி, செல்லப்ப கவுண்டன் வலசு ஆகிய இடங்களில் புதிய ரசிகர் மன்ற பெயர் பலகை திறப்பு விழா மாவட்ட தலைவர் சன் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய பரிந்துரையாளர் ம.ரமேஷ் குமார் வரவேற்றார்.

மன்றத்தின் மாவட்டச் செயலாளர் சசிகுமார் மாவட்ட பொருளாளர் பகிர் மாவட்ட துணை பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ் துணைத் தலைவர் சாக்கு பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

நகர பொறுப்பாளர்கள் பிரகாஷ், திவாகர் ஈரோடு ஒன்றிய தலைவர் முத்தமிழ் பிரபாகர், பவானி நகரத் தலைவர் கதிரவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் மன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரமேஷ் குமார், நாகராஜ், பார்த்திபன், மாதேஷ், கார்த்திகேயன், தினேஷ் பாபு மணிகண்டன், மாதேஷ், சுமை ரமேஷ், வேல்முருகன், சரவணன், கோபால், விவேக் தியாகு, சரவணன், லோகநாதன்மற்றும் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்முடிவில் அந்தியூர் நகர பொறுப்பாளர் ஜெயக்குமார் கூறினார்

Tags:    

Similar News