உள்ளூர் செய்திகள்

ஆடி பூரம் விழாவையொட்டி சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்

Published On 2023-07-22 07:29 GMT   |   Update On 2023-07-22 07:29 GMT
  • ஆடி பூரம் விழாவையொட்டி சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது
  • இதை தொடர்ந்து அம்ம னுக்கு சிறப்பு அபிேஷம், அலங்காரம், தீபாரானை நடந்தது.

சென்னிமலை:

ஆடி பூரத்தினை முன்னிட்டு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பெரிய நாயகி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவை யொட்டி கோவிலில் யாக பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து அம்ம னுக்கு சிறப்பு அபிேஷம், அலங்காரம், தீபாரானை நடந்தது. தொடர்ந்து உற்சவர் ஊஞ்சலில் எழுந்த ருளினார். ஊஞ்சலில் வைத்து பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு அம்மனை ஊஞ்சலில் வைத்து ஒதுவார் ஆனந்த சாமிகள் பாட்டு பாடி ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தலை மையில் மதி குருக்கள், தபுராஜ் சிவாச்சாரியார் ஆகியோர் அம்மனுக்கு ஊஞ்சல் ஆட்டினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News