- குப்பை குழியில் குப்பைகளை கூட்டி வைத்துவிட்டு மாராத்தாள் தீ வைத்துள்ளார்.
- மயக்கம் ஏற்பட்டு குப்பை குழியில் விழுந்து விட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த குடக்கரை கே. செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி மாராத்தாள் (82).
சம்பவத்தன்று வீட்டின் அருகே இருந்த குப்பை குழியில் குப்பைகளை கூட்டி வைத்துவிட்டு மாராத்தாள் தீ வைத்துள்ளார்.
அப்போது திடீரென மாராத்தாளுக்கு மயக்கம் ஏற்பட்டு குப்பை குழியில் விழுந்து விட்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாராத்தாளை குப்பை குழியில் இருந்து வெளியே மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாராத்தாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.