உள்ளூர் செய்திகள்

முதியவர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-11-07 15:01 IST   |   Update On 2023-11-07 15:01:00 IST
  • கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெருந்துறை:

பெருந்துறை பணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 78). இவர் பெருந்துறை வார சந்தையில் சோடா கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக அவருக்கு தீராத வயிற்று வலி இருந்தாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் வயிற்று குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த அவர் பெருந்துறை வார சந்தையில் உள்ள அவரது சோடா கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News