உள்ளூர் செய்திகள்

ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

Published On 2023-06-01 09:03 GMT   |   Update On 2023-06-01 09:03 GMT
  • காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதியவர் உடல் மிதந்து கொண்டிருந்தது.
  • கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் எதிரே காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதியவர் உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்த கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதன்பேரில் கொடுமுடி போலீசார் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த நபருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்று தெரியவந்தது.

ஆனால் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதியவர் ஆற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News