உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து முதியவர் சாவு

Published On 2022-10-14 09:52 GMT   |   Update On 2022-10-14 09:52 GMT
  • பழைய பொருட்களில் இருந்து வெளியே வந்த பாம்பு எதிர்பாராத விதமாக சேமலையை கடித்து விட்டது.
  • இதனால் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நம்பியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கண்ணகாட்டு பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேமலை (82). இவரது மனைவி பழனியம்மாள். சேமலை மகனுடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று சேமலை யும், அவரது மகனும் வீட்டின் காம்பவுண்டுக்குள் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் சிமெண்ட் சீட் செட்டிற்குள் இருந்த பழைய பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது பழைய பொருட்களில் இருந்து வெளியே வந்த பாம்பு எதிர்பாராத விதமாக சேமலையை கடித்து விட்டது.

இதனால் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நம்பியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேமலை அனுமதிக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சேமலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News