உள்ளூர் செய்திகள்

முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-11-03 09:54 GMT   |   Update On 2023-11-03 09:54 GMT
  • வீட்டில் சுப்பிரமணியம் தூக்குபோட்டு கொண்டார்.
  • ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு பெரியசேமூர், எல்லப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (73). விவசாயி. இவரது மனைவி பாப்பாத்தி (65). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுப்பிரமணி யத்துக்கு பல ஆண்டுகளாக பூர்வீக சொத்தில் பிரச்சனை இருந்து வருகிறது. மேலும் அவரது மகனும் கடந்த 10 வருடங்களாக சண்டை போட்டுக்கொண்டு பேசாமல் இருந்து வருகிறார். இதனால் சமீப காலமாக சுப்பிரமணியம் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்த ன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பிரமணியம் தூக்குபோட்டு கொண்டார். வெளியில் சென்ற அவரது மனைவி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மரு த்துவர் வரும் வழியிலேயே சுப்பிரமணியம் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News