உள்ளூர் செய்திகள்

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-07-29 10:03 GMT   |   Update On 2023-07-29 10:03 GMT
  • தங்கவேல் விஷம் குடித்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

கோவை மாவட்டம் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் வாட்ச் மேன் தங்கவேல் (வயது 70). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தங்கவேல் இவரது சகோதரி வனஜா என்பவரது வீட்டில் வசித்து வந்தார்.

இதையடுத்து தங்கவேல் சேலத்திற்கு சென்று வேலை செய்வதாக கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் தங்கவேல் சித்தோடு லட்சமி நகர் பகுதியில் விஷம் குடித்து கிடப்பதாக வனஜாவிற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தங்கவேலை ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கவேல் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து வனஜா சித்தோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News