உள்ளூர் செய்திகள்

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-05-06 09:42 GMT   |   Update On 2023-05-06 09:42 GMT
  • வயிற்று வலி காரணமாக பாட்டமூப்பன் குருணை மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
  • கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த ஒடையகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாட்டமூப்பன் (76). தனது மருமகள், பேரனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வயிற்று வலி காரணமாக பாட்டமூப்பன் வீட்டில் இருந்த குருணை மருந்தை (விஷம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாட்டமூப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Tags:    

Similar News